Sunday 28th of April 2024 10:30:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாதளவில் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள்!

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாதளவில் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள்!


தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் என்றுமில்லாதவாறு அதிக தொற்றும் மரணமும் நிகழ்ந்துள்ளது.

இன்று தமிழ்நாட்டில் புதிதாக 4 ஆயிரத்து 807 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மொதத்த தொற்று 1 இலட்சத்து 65 ஆயிரத்து 714 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இன்று 88 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றும் ஆயிரத்து 219 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 84 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை 1 இலட்சத்து 13 ஆயிரத்து 856 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 49 ஆயிரத்து 452 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE